புத்தாண்டு -1995
காலமகள் நிற்காமல் -
கணந்தோறும் சுழன்றாலும்
ஞாலத்தில் எல்லாரும்
நினைப்பூட்டிப் புத்தாண்டைக்
கோலமிகு விழாவெனவே
கொண்டாடி மகிழ்நிலையில்
பாலமெனப் பண்பாடும்
பயின்றுவரும் நேயமுமே
காலமெலாம் நிலைத்திருக்க
கவிபாடி வரவேற்ப்போம்
சீலமெலாம் சுழ்ந்திருக்க
செம்மாப்பாய் வரவேற்ப்போம்
நீலவான் எல்லையேலாம்
நீள் அமைதி செர்த்திடுவோம்
ஆலமர்ந்த செல்வனடி
அகலாமல் துதித்திருப்போம்!
Friday, December 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)


Nice kavithai ....
ReplyDeleteSuper....!!!
ReplyDelete